‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தளபதி நடிகரின் மூன்றெழுத்து படம் குறித்த நாளில் திரைக்கு வர சில தடைகள் ஏற்பட்டதால், சில நடிகர்கள் தங்களது கருத்தை வெளியிட்டனர். அதில் அந்த சுள்ளான் நடிகர், தனது டுவிட்டரில், இப்படி படங்களை தடை பண்ணுவதில் செலவு செய்யும் நேரத்தை நாட்டை முன்னேற்றுவதில் செலவு செய்திருந்தால் நாடு எவ்வளவோ முன்னேறியிருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்த செய்தியை படித்த அவரது அபிமானிகள், அரசுக்கு எதிராக பேச பெரிய பெரிய நடிகர்கள் அலறிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு இத்தனை தைரியம் எங்கே இருந்து வந்தது என்று நடிகரிடம சொன்னார்களாம். அதன்பிறகுதான், ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லி இப்படி அரசுக்கு எதிரான கருத்தை வெளியிட்டு விட்டோமே என்பதை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து போனாராம் நடிகர்.
அதனால்தான், அதையடுத்து நான் அரசுக்கு எதிரானவன் அல்ல, நான் வெளிநாட்டிலிருந்து வெளியிட்ட கருத்தை வேறு மாதிரியாக ஊடகங்கள் திருத்தி வெளியிட்டு விட்டன என்று ஊடகங்களின் மேல் பழியை போட்டு, எஸ்கேப்பாகி உள்ளார். இருப்பினும், சுற்றியிருப்பவர்களின் அச்சுறுத்தலில் இருந்து இன்னமும் மீளவில்லையாம் நடிகர். இந்த மனநிலையில், நமக்கு தேவையில்லாத விசயத்தில் தலையிட்டு, வம்பை விலை கொடுத்து வாங்கி விட்டோமே என்று புலம்பிக்கொண்டிருக்கிறாராம் ஒல்லிகுச்சி நடிகர்.