மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது மாதிரி சில்க் உயிரோடு இருந்தபோதும் அவரை வைத்து பலர் சம்பாதித்தார்கள். அவர் இறந்த பிறகும் அவரை வைத்து சம்பாதிக்கிறார்கள். முதன் முதலில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் அவரது வாழ்க்கையை படமாக எடுத்தார்கள். அதன் பிறகு மலையாளத்தில் கிளைமாக்ஸ் என்ற பெயரில் எடுத்தார்கள். அது ஒரு நடிகையின் டயிரி என்று தமிழிலும் டப் ஆனது.
இப்போது கன்னடத்தில் சில்க் சக்காத் என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். இதில் சில்க் ஸ்மிதாவாக பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடித்துள்ளார். படத்தை செப்டம்பர் 10ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குள் கர்நாடகா முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஸ்ரீராம சேனா என்ற அமைப்பினர் பாகிஸ்தான் நடிகை நடித்த படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம், திரையிடும் தியேட்டர் வாசலில் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். பல இடங்களில் கலவரம் போலீஸ் தடியாடி நடந்திருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீராம் சேனா அமைப்பினர், படத்தில் ஆபாச காட்சிகள் நிறைய இருக்கிறது. எனவே படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடர்ந்தனர். படத்துக்கு தடைவிதித்த நீதிமன்றம் இது தொடர்பாக தணிக்கை குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுபற்றி படத்தின் டைரக்டர் திரிசூல் கூறும்போது, வீணா மாலிக் இந்திய படங்களில் நடிப்பது ஒன்றும் புதிதில்லை. தற்போதுகூட நகன சத்யம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு தேவையான அளவிற்கான காட்சிகள் இருக்கிறதே தவிர கவர்ச்சிக்காக எந்த காட்சியையும் திணிக்கவில்லை. நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.