இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைப்பதற்கு, திரைப்பட நடிகை திரிஷா, திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷாவிற்கு, நாய்கள் என்றால் கொள்ளை பிரியம். பிராணிகள் நல அமைப்பான, "பீட்டாவிலும் உறுப்பினராக உள்ளார். சென்னையில் நாய் தொந்தரவு அதிகம் இருந்ததால், நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க, சென்னை மாநகராட்சி மூலம், "பி திட்டம் என்ற பெயரில், 15 இடங்களில், காப்பகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு, நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். திட்டத்தை கைவிடக் கோரி, சென்னை மாநகராட்சி மேயருக்கு, திரிஷா அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம்:
நாய்கள், வயதானவையாகவும், சுகவீனமாகவும் இருந்தாலும் கூட, ஆயுள் காலம் வரை, பட்டிகளில் அடைத்து வைப்பது கொடுமையானது. அனைத்து வயதில் உள்ள நாய்களுக்கும், அன்றாடம் உடற்பயிற்சி, மன எழுச்சி, புதிய மணங்களை ஆராயும் வாய்ப்பு மற்றும் இதர நாய்களுடன் சமூக பிணைப்பை உருவாக்கும் நிலைகள் உண்டு. பட்டியில், இந்த விஷயங்கள் எதையும், அவற்றால் மேற்கொள்ள முடியாது. இது போன்ற சூழ்நிலைகளில், பல நாய்கள், கடுமையான சோர்வுக்கு ஆளாகும்; மணங்களை இழக்கும்; பாதிக்கப்படும்.
நாய்களை பட்டிகளில் அடைக்கும் இந்த அணுகுமுறையை, ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் முயற்சித்த போது, பட்டிகளில் அடைத்து வைக்கப்பட்ட பல நாய்கள், முரட்டுத்தனமாக மாறி சண்டையிட்டன. பலம் வாய்ந்த நாய்கள், பலம் குறைந்த நாய்கள், உணவு உண்பதைத் தடுத்தன. பட்டிகளில், கழிவுகள் சுத்தப்படுத்தப்படாததால், நாய்கள், அதன் மீதே வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நோய் பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான நாய்கள் இறந்தன. இதே போன்ற நிலை, பூடானிலும் ஏற்பட்டது. நாய்களை, ஆயுள் முழுவதும் பட்டிகளில் அடைத்து வைப்பது, மிகவும் கொடுமையானது.
நாய்களுக்கு சிகிச்சை அல்லது கருத்தடை செய்த பிறகு, கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே, அவற்றை, மீண்டும் விட்டு விட வேண்டும். நாய்களை பட்டிகளில் அடைப்பது, விலங்கு கருத்தடை சட்ட விதிமுறைகளை மீறிய செயல். நாய்களை பட்டிகளில் அடைத்து வைத்தால் மட்டுமே, சென்னையில், நாய்கள் பிரச்னை தீராது. கருத்தடை மற்றும் "ரேபிஸ் நோய் எதிர்ப்பு திட்டத்தில், மாநகராட்சி அதிரடி கவனம் செலுத்தினாலே போதும்.
இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.