ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவின் கனவு கன்னி ஹன்சிகாவுக்கு இன்று 21 வயது நிறைவடைந்து 22வது வயது பிறக்கிறது. வெறும் அழகு பொம்மை, நடிக்கத் தெரியவில்லை. நன்றாக வளரும் நேரத்தில் காதல் என்று ஹன்சிகா மீது ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் இருந்துவிட்டு போகட்டும். அவர் நல்ல மனுஷி, இந்த இளம் வயதிலேயே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கம். 22 வயதில் 23 அநாதை குழந்தைகளை தத்தெடுத்து பராமரிப்பது. பத்து புற்று நோயாளிகளின் சிகிச்சை செலவை ஏற்றிருப்பது என்று ஹன்சிகாவின் இன்னொரு முகம் ஆச்சர்யமானது.
இதற்கெல்லாம் மூல காரணம் அவரது தாய் மோகனா. யாரையும் மதித்து போற்றும் தன்மை கொண்டவர். மீடியா நண்பர்களை நலம் விசாரிக்கும் ஒரே தாய். அவர் டாக்டர் என்பதால் பத்திரிகையாளர் யாரைப் பார்த்தாலும் உங்களுக்கு இந்த குறைபாடு இருக்கிற மாதிரி தெரியுது உடனே செக் பண்ணுங்க என்று சொல்லும் அந்த பாசம். இதுதான் ஹன்சிகாவின் வளர்ச்சிக்கு காரணம். ஹன்சிகா தன் காதலை தாயிடம் சொன்னபோது கூட நல்லா சம்பாதிக்கிற நேரத்துல இதெல்லாம் தேவையா என்று துள்ளி குதிக்காமல், ‘ஓகே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’, என்று கூலாக சொன்னவர் மோகனா.
இன்று ஹன்சிகாவின் பிறந்த நாள் என்பதால் அவரை பற்றி ஒரு சின்ன பிளாஷ் பேக்...
பிறந்தது, வளர்ந்தது, படித்தது மும்பை. அப்பா ப்ரதீப் மோத்வானி பிசினஸ்மேன். அம்மா மோகனா டாக்டர். குழந்தை நட்சத்திரமாக இந்திப் படத்தில் நடிக்கத் தொடங்கினார். உரிய வயதை எட்டியதும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தேசமுருடு என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகம். ஹன்சிகாவின் அழகு அக்கட தேசத்து மக்களை அசைத்துப்போட தொடர்ந்து தெலுங்கு ஹிட் கிடைத்தது. மாப்பிள்ளை மூலம் கோலிவுட் வருகை நிகழ்ந்தது. எங்கேயும் காதல், வேலாயுதம், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம்-2 நடித்தார். இதில் எங்கேயும் காதல் தவிர அத்தனையும் ஹிட். தெலுங்கு, தமிழில் இதுவரை 20 படங்களில் நடித்திருக்கிறார். அதில் 15 வெற்றிப் படங்கள். தமிழில் தற்போது மான்கராத்தே, பிரியாணி, வாலு, வேட்டை மன்னன், ராஜ்குமார் இயக்கும் இஷாக் ரீமேக், ஆகிய படங்களிலும், தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.
தனது 23வது குழந்தையை தத்தெடுக்க இன்று மும்பையில் இருக்கிறார். இன்னும் அவர் பல ஆண்டுகள் சினிமாவில் இருக்க வேண்டும். 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துவோம். 100 குழந்தைகளுக்கு வாழ்க்கை கிடைக்குமே.
பிறந்த நாளையட்டி இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் "2012 - 2013 ஆண்டு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நிறைய உழைத்தேன். நிறைய வெற்றிகளை ருசித்தேன். இது உங்கள் ஆதரவால், ஒத்துழைப்பால் வழிகாட்டுதலால் நடந்தது" என்று கூறியிருக்கிறார்.