டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தி சினிமாவில் பிரபல இயக்குனராகி விட்டவர், நடிகரும், நடனமாஸ்டருமான பிரபுதேவா. இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் களவாடிய பொழுதுகள். தங்கர்பச்சான் இயக்கிய இந்த படத்தில் பிரபுதேவாவுடன் பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக திரைக்கு வர முடியாத சில சிக்கல்களில் சிக்கியிருந்த இப்படத்தை தற்போது மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வெளியே கொண்டு வருகிறார்கள். ஆனால், தான் நடித்ததில் வித்தியாசமான படம் என்பதால், இப்படம் எப்போது திரைக்கு வருகிறது என்று அடிக்கடி தங்கர்பச்சானுக்கு போன் போட்டு கேட்பாராம் பிரபுதேவா. இதோ, அதோ என்று சில வருடங்களாக சொல்லி வந்தவர், திடீரென்று ஒருநாள் போன் போட்டு செப்டம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது என்ற சந்தோச செய்தியை சொன்னாராம்.
அதையடுத்து, சமீபகாலமாக எந்த தமிழ் சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமலிருக்கும் பிரபுதேவா, இந்த படத்துக்காக நேற்று சென்னையில் நடந்த அப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார்.
அப்போது, நான் நடித்ததில் இது வித்தியாசமான படம். நான் நடித்தேன் என்று சொல்ல முடியாது. தங்கர்பச்சான் சொன்னதை செய்தேன். வா உட்காரு, எழுந்து செல், இந்த வார்த்தையை பேசு என்பார். அதைத்தான் செய்தேன். ஆனால், ஒரு உயிரோட்டமான கதை. நடித்த எனக்கு முழுதிருப்தி கிடைத்தது.
இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு எனது நடிப்பை புகழ்ந்தால், அது அத்தனையும் தங்கர்பச்சானைத்தான் சேரும் என்று சொன்ன பிரபுதேவா, இந்த களவாடிய பொழுதுகள், காதலிக்கப்போகிறவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், காதலை மறக்க முடியாமல் சுமந்து திரிபவர்கள் என எல்லோருடைய மனதையும் களவாடும் என்றார்.