‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு மகளிர் கல்லூரி நாட்டிய விழாவில் நடிகை சொர்ணமால்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நாட்டியத்தை ரொம்ப பெருமையாக பேசினார். பின்னர் அந்த காலத்தில் நாட்டியத்தில் சிறந்து விளங்கியவர்கள் தேவதாசிகளாக இருந்தனர். கடவுளின் மனைவியர்களாக புனிதர்களாக திகழ்ந்தனர். தேவதாசி தொழில் என்பது கடவுளுக்கு தங்களை அர்ப்பணிப்பது போன்றது என்றெல்லாம் பேசினார்.
அப்போது அந்த பேச்சுக்கேட்டு கூடியிருந்தோர் பலத்த கரகோசம் எழுப்பினர். ஆனால் இப்போது ஜான்சிராணி என்ற பெண்கள் அமைப்பு சொர்ணமால்யாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அந்த காலத்தில் உயர்ஜாதியினர் தேவதாசிகளை தங்களது இச்சைக்காக காலம் காலமாக அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். பின்னர் வந்த காலங்களில் பெண்களின் அந்த அடிமைத்தனத்தை உடைக்க நினைத்தவர்கள் அதற்கு எதிராக போர் தொடுத்து அந்த தேவதாசி முறையை ஒழித்து பெண்களை காப்பாற்றினர். அதனால் அப்படி பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்ததை மறந்து விட்டு, அவர்களை கடவுள்களின் மனைவியர், புனிதர்கள் என்றெல்லாம் பேசி பெருமைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளனர்.