தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மார்க்கெட்டில் இருக்கும் ஹன்சிகா, அனுஷ்கா, சமந்தா, லட்சுமிராய் போன்ற நடிகைகள் காதலில் விழுந்திருக்கும் நிலையில், எதிர்நீச்சல் பட நாயகி ப்ரியாஆனந்த் மட்டும் இதுவரை எந்தவொரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் தப்பித்து வருகிறார். அவரிடத்தில், காதல் பற்றி கருத்து கேட்டால், காதல் ரொம்ப இனிமையானது. பீல் பண்ணிக்கொண்டேயிருக்கலாம். எனக்கும் அந்த பீலை உணர வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாளாகவே மனதளவில் உள்ளது. ஆனால், காதல் சும்மா வந்து விடுமா? மனதுக்கு பிடித்தமான நபரை சந்திக்கும்போதுதானே கெமிஸ்ட்ரி உருவாகும் என்கிறார்.
ஏன் தமிழ் சினிமாவில் உள்ள இளவட்ட ஹீரோக்கள் யாரையும் உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று கேட்டால், பிடிப்பதற்கும், காதல் வருவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பேசுகிறவர்கள், பழகுகிறவர்கள் மீதெல்லாம் காதல் வந்து விடாது. நட்பு வேண்டுமானால் வரும். ஆனால் காதல் யாராவது ஒருவர் மீதுதான் வரும். அந்த ஒருவர் யார் என்பது யாருக்கும் தெரியாது. அதேபோல் காதலும் எப்போது வருமென்று தெரியாது.
அதனால் அப்படி வரும் காதல் எப்போது என்னைத்தேடி வந்தாலும் அதை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன். அதேபோல் நான் காதலிக்கும்போது அதை ரகசியமாகவும் வைக்க மாட்டேன். ஹன்சிகா மாதிரி ஓப்பனாக சொல்லியே காதலிப்பேன் என்கிறார் ப்ரியாஆனந்த்.