டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காதல் கொண்டேன் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் சோனியா அகர்வால். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த டைரக்டர் செல்வராகவனையே பின்னர் காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர்களின் காதல் கசந்து போனதையடுத்து விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பிறகு, உடனடியாக அடுத்த கல்யாணம் செய்து கொண்டார் செல்வராகவன். ஆனால், சோனியா அகர்வாலோ, மீண்டும் கலைச்சேவையில் நாட்டம் கொண்டு வானம் படத்தில் ஒரு கேரக்டரில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இனி கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டதால் புதிய படங்கள் கிடைக்காமல் தடுமாறி நின்றார்.
ஆனால் ஓராண்டுக்குப்பிறகு இப்போது வேறு வழியில்லாமல் ஒரு தெலுங்கு படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளார் சோனியா அகர்வால். இதையடுத்து தமிழிலும் குத்துப்பாட்டு, வில்லி வேடம், சென்டிமென்ட் கேரக்டர் என்று எதுவாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பேன் என்றும் தனது அடிபொடிகள் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகை.