'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
3 படத்தில் அறிமுகமான கொலவெறி புகழ் அனிருத் அதன்பிறகு எதிர்நீச்சல் படத்தில் ஹிட் கொடுத்தார். அது அவரது இரண்டாவது ஹிட்தான். அதற்குள் முன்னணி டைரக்டர், ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். தற்போது அரை டஜன் படங்களில் இசையமைத்து வரும் அவர், முதலில் தன்னை ஒப்பந்தம் செய்த கம்பெனிகளிடம் குறைவான சம்பளம்தான் பேசியிருந்தார்.
ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு ஒன்றரை கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதால், தன்னை ஏற்கனவே ஒப்பந்தம் செய்தவர்களையும் அழைத்து அதே சம்பளம் தர வேண்டும் என்று கண்டிசனாக பேசியிருக்கிறார். அதில் நடிகர் ராகவா லாரன்சும் ஒருவராம். முனி-3 கங்கா படத்துக்காக 50 லட்சம் மட்டும் தருவதாக அனிருத்திடம் பேசியிருந்தாராம். ஆனால் இப்போது கூடுதலாக இன்னும் ஒரு கோடி வேண்டும் என்றதும், இதுக்கு மேல ஒரு லட்சம் கேட்டாகூட நம்ம பட்ஜெட் தாங்காது சாமி என்று அனிருத்திடம் விடைபெற்றுக்கொண்டு வெளியேறி விட்டாராம் ராகவாலாரன்ஸ்.
அதையடுத்து, இப்போது இன்னும் சில படாதிபதிகளிடம் அனிருத்தின் திடீர் விலையேற்றத்தால் அவரிடமிருந்து கழண்டு கொள்ளும் நிலையில் இருக்கிறார்களாம்.