'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பார்ப்பதற்கு அமைதியான, அடக்க ஒடுக்கமான பெண்ணாக காட்சி தரும் சமந்தா, கல்லூரி காலத்தில் "துறு துறு வென்று, சேட்டைக்கார பெண்ணாக இருந்தாராம். இவர் இருக்கும் இடம், எப்போதுமே அரட்டை அரங்கமாக அமர்க்களப்படுமாம். இப்படி, சக மாணவிகளிடம் கேலி, கிண்டல் என, ஜாலி செய்த சமந்தா, பல நாட்களில், கல்லூரியை கட் அடித்து விட்டு, சினிமா பார்க்க சென்றுள்ளார். அப்படி ஒருமுறை அவர் சென்றது, கல்லூரி முதல்வரிடம் புகாராக சென்றதாம். கல்லூரி முதல்வர், அவரை கண்டித்து, அறிவுரை சொன்னதையடுத்து, தன் அடாவடித்தனத்தை விட்டு, அமைதியான பெண்ணாக மாறினாராம் சமந்தா. மற்றொரு போனஸ் தகவலும் உண்டு. சமந்தாவின் இயற்பெயர், யசோதாவாம்.