இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
நயன்தாரா விவகாரத்துக்கு பின், சிம்புவைக் கண்டாலே நடிகைகளுக்கு பயம். "அவருடன் நடித்தால், காதல் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கும். அதனால், தங்கள் மார்க்கெட்டும் பாதிக்கும் என, கோலிவுட்டில் பேச்சு இருந்ததால், பல முன்னணி நடிகைகள், விலகியே நின்றனர். இந்நிலையில், "வாலு, வேட்டை மன்னன் படங்களுக்கு, சிம்புவுடன் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானபோது கூட, நயன்தாராவுடன் அவர் காதல் கொண்டு பிரிந்த விஷயத்தை சொல்லி, பல அபிமானிகள் ஹன்சிகாவை எச்சரித்தனராம். அதனால், சிம்புவுடன் நடிக்கத் துவங்கிய போது, அவரைக் கண்டு பயந்து, ஒதுங்கியே நின்றாராம் ஹன்சிகா.
ஆனால், போகப் போக சிம்புவின் நாகரிகமான நடவடிக்கையும், பேச்சும், ஹன்சிகாவை கவர்ந்ததாம். அதன்பின் தான், மெல்ல மெல்ல புன்முறுவல் பூக்க ஆரம்பித்துள்ளார். இப்படி ஏற்பட்ட நட்பு தான், நாளடைவில் காதலாக மாறியதாம். இதை தன் நட்பு வட்டாரங்களிடம் சொல்லி சிலிர்க்கும் ஹன்சிகா, இத்தனை நாளும் மற்ற ஹீரோக்களை மாதிரி தான், சிம்புவும். அவர் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை என்று சொல்லி வந்தார். ஆனால், காதலை ஒப்புக் கொண்ட பின், "சிம்பு எனக்கு எப்பவுமே, "ஸ்பெஷல் தான் என்று, வெட்கத்துடன் சொல்கிறார் ஹன்சிகா.