Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறந்ததாக வதந்தி : முற்றுப்புள்ளி வைத்த கனகா!!

30 ஜூலை, 2013 - 16:10 IST
எழுத்தின் அளவு:

"புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை கனகா காலமானார் என்று, "டிவி சேனல்கள், நேற்று பிற்பகல் வெளியிட்ட தகவல், தமிழகம் முழுவதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், உயிருடன் உள்ள நடிகை கனகா, ""நான் நலமுடன் உள்ளேன். ஆண்களை பிடிக்காததால், திருமணம் செய்து கொள்ளாமல், தனிமையில் வசித்து வருகிறேன். எனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி, தேவதாஸ் என்பவர், என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார், என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

கடந்த, 1989ல் வெளியான, "கரகாட்டக்காரன் படத்தின் கதாநாயகியாக, தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை கனகா. "புருஷன் எனக்கு அரசன், துர்கா, சாமுண்டி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, அம்மன் கோவில் திருவிழா, சக்கரைத்தேவன் உட்பட பல படங்களில், நடிகர்கள், ரஜினி, பிரபு, விஜயகாந்த், கார்த்திக், மம்முட்டி, மோகன்லால் உட்பட பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

பழம் பெரும் நடிகை தேவிகா இவரது தாய். தேவிகா இறந்த பின், படங்களில் நடிப்பதை கனகா தவிர்த்தார். "கணவர் என, கூறிய நபர் மற்றும் "ஆவி அமுதா ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்னையால், மிகவும் வேதனைப்பட்டார். 2004ல் இருந்து, திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.

புற்றுநோய்?

இந்நிலையில், "நடிகை கனகா புற்றுநோயால் அவதிப்படுகிறார். கேரளா மாநிலம், ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என, இரண்டு தினங்களுக்கு முன், தகவல் வெளியானது. இதுகுறித்து, ஆலப்புழாவில் உள்ள தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டபோது, தகவல் உறுதியாகவில்லை. இதனால், நடிகை கனகா எங்கு இருக்கிறார் என, இரண்டு நாட்களாக பரபரப்பு காணப்பட்டது.

இறந்ததாக வதந்தி

இந்நிலையில், நேற்று பிற்பகல், "நடிகை கனகா இறந்துவிட்டார் என, தகவல் வெளியானது. இது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடிகை கனகா வீடு உள்ளது. அங்கு, பத்திரிகையாளர்கள் சென்றபோது, கனகா, அவர் வளர்க்கும் பூனைகளுக்கும்,கோழிகளுக்கும் நிதானமாக தீனி போட்டுக் கொண்டு இருந்தார். அதிர்ச்சி அடைந்த பத்திரிகையாளர்கள், நடந்த விஷயம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்டனர்.

எயிட்ஸ் என்று சொல்லாமல் விட்டார்களே : கனகா

அப்போது நடிகை கனகா கூறியதாவது: நான், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்று வந்தாக கூறப்பட்டது, தவறான தகவல். நான், சென்னை வீட்டில் தான் இருகிறேன். எனக்கு புற்றுநோய் என, வதந்தி பரவியிருக்கிறது. நல்ல வேளை, "எய்ட்ஸ் என்று செய்தி வரவில்லை. இந்த வதந்திகளை, என் தந்தை என்று கூறிக் கொள்ளும், தேவதாஸ் என்பவர் தான் பரப்புகிறார். இதையே காரணமாக வைத்து, என்னை சந்தித்து பேசி, என் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார். பத்திரிகைகளில் செய்தி வந்ததும், என்னை தேடி ஆலப்புழாவுக்கு அவர் செல்லாமல், என் சென்னை வீட்டிற்கு வர முயன்றதை வைத்து பார்க்கும் போது, அவர் தான் என்னை பற்றி தவறான செய்தி பரப்பியிருக்கலாம் என, சந்தேகப்படுகிறேன்.

ஆண்களை பிடிக்கவில்லை

என் அம்மாவுக்கு ஒரு நல்ல கணவனாக, எனக்கு நல்ல தந்தையாக அவர், எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அம்மா இறந்த பின், எனக்கு பல சிரமங்கள் வந்தன. அவற்றை சமாளித்து, அமைதியாக வாழ்ந்து வருகிறேன். அப்பா என்று சொல்லிக் கொண்டவருக்கு, என்னைவிட, என் சொத்து மீது தான் அதிக கவனம். இதனால் தான், எனக்கு ஆண்களை பிடிக்காமல் போனது; "இனி திருமணம் வேண்டாம் என, முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்து வருகிறேன். என் வீட்டில், வேலைக்காரி மட்டுமே உடன் இருக்கிறார். எக்காரணத்தை கொண்டும் என் தந்தை என, கூறிக் கொண்டிருக்கும் தேவதாசை, என் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவிற்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன். சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன். அவர்கள் பேச விரும்பவில்லை; பரவாயில்லை. பத்திரிகைகளில் எனக்கு புற்றுநோய் என செய்தி வந்தது, வருத்தமாக இருக்கிறது. தற்போது, நான் இறந்துவிட்டதாக செய்தி வந்து இருப்பது, அதிர்ச்சியாக இருந்தாலும், உங்களின் (பத்திரிகையாளர்கள்) சந்திப்பால், நான் நல்லபடியாக இருப்பது, மக்களுக்கு தெரிந்துவிடும்; இது சந்தோஷமாக இருக்கிறது; யார் மீதும் நான் வருத்தப்பட்டு என்னவாகப் போகிறது. இவ்வாறு, நடிகை கனகா கூறினார்.

பாசம் எங்கே?

நடிகை கனகா கூறியதாவது: என்னைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொள்பவர்களுக்கு, என்னைவிட, என் சொத்தின் மீது தான், கவனம் அதிகம் உள்ளது. அவர்களைப் பார்த்தால், வெறுப்பு தான் வருகிறது. மனிதர்களைவிட வளர்ப்புப் பிராணிகள் மீது தான் பாசம் அதிகம் இருக்கிறது. எனவே தான், 35 பூனை, 35 கோழிகளை வளர்த்து வருகிறேன். இவை என்னிடம் பாசமாக உள்ளன. இதுவே எனக்கு மன நிறைவாக உள்ளது. இவ்வாறு, கனகா கூறினார்.

தந்தை பேட்டி:

கனகாவின் தந்தை தேவதாஸ் கூறும்போது, ""கனகாவுக்கு புற்றுநோய் என, பத்திரிகைகளில் செய்தியைப் பார்த்துவிட்டு தான், கனகா வீட்டிற்குச் சென்றேன். என்னை வேண்டாதவனைப் போல நினைக்கிறாள். வேலைக்காரியை விட்டு என்னைத் துரத்திவிட்டாள். என்ன தான் அலட்சியப்படுத்தினாலும், அவள் என் மகள்; அவள் மீதான பாசம் குறையாது. தனிமை தான் அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது, என்றார்.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

ksv - chennai,இந்தியா
31 ஜூலை, 2013 - 17:03 Report Abuse
ksv அட ஆவியெல்லாம் டிவில பேசுமா ??????????
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
31 ஜூலை, 2013 - 14:50 Report Abuse
Vaal Payyan என்னது மகாத்மா காந்தி செத்துட்டாரா ....
Rate this:
karthi - kuwait  ( Posted via: Dinamalar Android App )
31 ஜூலை, 2013 - 11:29 Report Abuse
karthi பாவம்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 16:41Report Abuse
சு கனகராஜ் நல்ல வேளை சமாதி கட்டி உள்ளே வைக்காமல் போனார்களே...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 17:56Report Abuse
சு கனகராஜ் வதந்தியை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்...
Rate this:
Navein Raajh Tiraviam - Kuala Lumpur,மலேஷியா
31 ஜூலை, 2013 - 08:08 Report Abuse
Navein Raajh Tiraviam நல்லவேளையாக ''கனகா, நலமாக உள்ளார் நான் அவரின் தீவிரமான ரசிகன், அவர் நடித்த எல்லாம் படங்களையும் நான் பார்க்க தவறியது இல்லை கடவுளுக்கு நன்றி கூறிகொள்கிறேன், இனி தயாரிப்பாளர்கள் கண் ''கனகாவின் பக்கம் திரும்பட்டும், அவருக்கு மீண்டும் திரையில் வர ஒரு வாய்ப்பு தாருங்களேன் அவரால் மீண்டும் நமக்கெல்லாம் ஒரு நல்ல நடிப்பை தரமுடியும், இதற்கு முன் இவர் ''கரகாட்டகாரன், தங்கமான ராசா, மாரியம்மன் திருவிழா, வெள்ளைய தேவன், பெரிய வீட்டு பண்ணக்காரன்,எதிர் கற்று, சக்தி வேல், பெரிய குடும்பம், தாலாட்டு கேட்குதம்மா, கும்பக்கரை தங்கையா, ஜல்லிக்கட்டு காளை,அதிசய பிறவி, கட்ட பஞ்சாயத்து,கோவில் காளை,சக்கரை தேவன், முதல் குரல், கிளி பேச்சு கேட்கவா,துர்க்கா, முதலாளி அம்மா, சீதா, சிம்ம ராசி, கடைசியாக இவரின் நடிப்பில் வெளிவந்த விரலுக்கேத்த வீக்கம் இன்னும் இப்படி நிறைய படங்களை எங்களுக்கு சிறப்பாக நடித்து தந்துள்ளார் திரை உலகில் மீண்டும் கால் பதிக்க இறைவனை வேண்டுகிறேன்,
Rate this:
gungroo - Chennai,இந்தியா
31 ஜூலை, 2013 - 06:26 Report Abuse
gungroo நாட்டுக்கு ரொம்ப தேவையாna saidhi.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31 ஜூலை, 2013 - 17:57Report Abuse
சு கனகராஜ் பூனையும் கோழியும் வளர்த்தால் உன் பாசம் அடங்கி விடுமா, 5 தத்து குழந்தைகளை எடுத்து வளருங்கள்...
Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in