இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜெய்-அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்தவர் நாடோடிகள் அனன்யா. அந்த படத்திற்கு பிறகு கேரளாவைச்சேர்ந்த பைனான்சியர் ஆஞ்சநேயலு என்பவரை திருமணம் செய்து கொண்ட அனன்யாவுக்கு இப்போது தமிழில் புலிவால் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் ஏற்கனவே ஒரு மார்க்கமாக இருக்கும் அனன்யா, இப்போது இன்னும் உடல் பெருத்து ஆன்ட்டி போன்று இருக்கிறாராம். என்றாலும், புலிவால் குடும்பக்கதை என்பதால், ஓ.கேவாகி விட்டாராம்.
விமல்-பிரசன்னா என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் அனன்யா மட்டும் நாயகி இல்லையாம். அவருடன் விமலின் ஆஸ்தான நாயகி ஓவியா மற்றும் இனியா ஆகியோரும் உடனிருக்கிறார்களாம். ஆக. இந்த படத்தில் மூன்று கேரளத்து நடிகைகள் நடிக்கிறார்கள். இதில் ஓவியா-இனியா இருவரும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால், அனன்யாவை மட்டும் உடல் இளைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம் பட இயக்குனர்.
அதனால், இதுநாள் வரை ஆஞ்சநேயலுவின் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு அவரைப்போலவே உப்பிப்போன அனன்யா, இப்போது தனது தாய் வீட்டுக்கு இடம்பெயர்ந்து வந்து டயட்ஸ் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளாராம். ஒரே மாதத்தில் குறைந்தது 10 கிலோவாவது குறைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ள அனன்யா, அடுத்து மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கவும் சில அபிமானிகளை நாடியுள்ளாராம்.