விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ஒன்பதுல குரு படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாகி விட்டார் லட்சுமிராய். முனி-2 கங்கா படமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், தனது தாய்மொழியான கன்னட சினிமாவில் முழுநேர நடிகையாகி விட்ட லட்சுமிராய், இந்திப்படங்களுக்காகவும் சில மாதங்களாக முயற்சி எடுத்தார். ஆனால், மும்பையில் முகாமிட்டுள்ள அசின், இலியானா, தமன்னா, ஸ்ருதி போன்ற தென்னிந்திய நடிகைகளின் அதிரடி பிரவேசத்துக்கு நடுவே லட்சுமிராயினால் ஒரு அடிகூட முன்னுக்கு எடுத்து வைக்க முடியவில்லையாம்.
அதனால் பாலிவுட்டில் எடுக்கிற முயற்சி அனைத்தும் வேஸ்டுதான் என்று தானாகவே இப்போது பின்வாங்கி விட்டார் லட்சுமிராய். அதேவேகத்தில் மீண்டும் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார் நடிகை. அப்படி வந்திருப்பவர், இங்குள்ள தனது முந்தைய நாயகர்கள் சிலரை மடக்கத் தொடங்கியிருக்கிறார். அப்படி திரைக்குப்பின்னால் சிலரிடம் தனக்கு சிபாரிசு கோரி டார்ச்சர் கொடுத்து வரும் நடிகை, இப்போது அஜீத் பற்றியும் புகழ்பாடத் தொடங்கியிருக்கிறார்.
நான் ஜோடி சேர்ந்த நடிகர்களில் அஜீத்தான் பெருமைக்குரிய நடிகர். ரொம்ப அந்நியோன்யமாக பழகும் பண்பு கொண்டவர். மற்ற நடிகர்களிடமெல்லாம் நட்பு வைத்திருந்தாலும், அஜீத்திடம் மட்டும் நான் என் சொந்த வாழ்க்கை பற்றிய விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்வேன். அந்த அளவுக்கு எங்களது நட்பு ரொம்ப டீப்பானது என்றும் புதிய பப்ளிசிட்டியை முடுக்கி விட்டுள்ளார் லட்சுமிராய்.