மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சினிமாவில் இருக்கும் ஒருவரால் தான் என்னையும், என் தொழிலையும் புரிந்து கொள்ள முடியும், அதனால் சினிமாவில் இருக்கும் ஒருவரைத்தான் திருமணம் செய்வேன் என்று நடிகை மேக்னா ராஜ் கூறியுள்ளார். காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மேக்னா ராஜ். தற்போது தமிழில் படங்கள் இல்லையென்றாலும் கன்னடத்தில் பிஸி நடிகையாக இருக்கிறார். சுந்தரபாண்டியன் படத்தின் கன்னட ரீ-மேக்கில் லட்சுமி மேனன் வேடத்தில் நடிக்க இருக்கிறார் மேக்னா.
இந்நிலையில் தனது திருமணம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. எனது திருமணம் நடைபெற குறைந்தது 5 வருடங்களாவது ஆகும். பெற்றோர் பார்க்கும் திருமணத்தை விட காதல் திருமணத்தில் எனக்கு விருப்பம். அதிலும் சினிமாவில் இருக்கும் ஒருவரை காதலித்து திருமணம் செய்வது விருப்பம். ஏனென்றால் சினிமாவில் இருக்கும் ஒருவரால்தான் என்னையும், என் சினிமா தொழிலையும் பற்றி நன்கு புரிந்து கொள்ள முடியும். அதேசமயம் என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை, என்னை புரிந்து நடந்து கொள்பவராக இருந்தால் அவரை ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.