தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகிகள் பட்டியலில் இணைந்தவர் நடிகை பார்வதி. அந்த கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்து காட்டிய பார்வதியை அதற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் காணோமே... என்று தமிழ் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அம்மணி சத்தமில்லாமல் கன்னட படம் ஒன்றில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ஏன் தலை காட்டவில்லை என்று பார்வதியிடம் கேட்டால், தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கேற்ற படமோ, பாத்திரமோ கிடைக்கவில்லை. பூ படம் போலவே எனது நடிப்பை வெளிப்படுத்தும் படம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். தற்போது கன்னடத்தில் டைரக்டர் ஜேக்கப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். விரைவில் தமிழுக்கு வருவேன், என்கிறார்.