தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‘‘யோகி’’ படத்தில் ஹீரோவாக நடித்த அமீர் அதன்பிறகு கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா பாட்டுக்கு ஆடினார். இப்போது மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். ‘‘கொள்ளைக்காரன்’’ படத்தை இயக்கிய சந்திரன் அடுத்து இயக்கும் ‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’’ படத்தில் அமீர் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தற்போது 555 படத்தில் பரத்க்கு ஜோடியாக நடிக்கும் மிருத்திகா. ‘ஆடுகளம்’ நரேன் வில்லன். எப்போதும் தாடியுடன் காட்சி தரும் அமீர், ‘‘பேரன்பு கொண்ட பெரியவர்களுக்காக’’ தாடியை எடுத்துவிட்டார். "நடுத்தர வயது அமீருக்கும் இளம் பெண் மிருத்திகாவுக்கும் வரும் காதலும் அந்த காதலால் வரும் குழப்பமும், அந்த குழப்பத்தை தீர்க்க உதவும் காட்சிகளும் காமெடியாக இருக்கும். அமீர் அண்ணனுக்கு இந்தப் படம் பெரிய டர்னிங்பாயிண்டா இருக்கும்" என்கிறார் இயக்குனர் சந்திரன்.