பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
300 படங்களை தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் மம்முட்டி மலையாளத்தில் பிசியான நடிகர் கம் சூப்பர் ஸ்டார். இப்போது மகன் வேறு நடிக்க வந்துவிட்டார். அப்பா-மகன் படம்கூட போட்டி போட்டு ரிலீசாகிறது. இந்த பிசியான வாழ்க்கையிலும் மம்முட்டி விவசாயியாகவும் வாழ்கிறார். கோட்டையம் அருகே பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி அதில் நெல் விவசாயம் செய்கிறார். "நமக்கு தேவையான நெல்லை நாமே விவசாயம் செய்ய முடியும். மற்ற மாநிலங்களில் கையேந்தி நிற்க வேண்டியதில்லை" என்று சொல்லி வந்தார். இப்போது அவரே செயலிலும் இறங்கி விட்டார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவரே நேரடியாக பண்ணைக்குச் சென்று விவசாய வேலைகளில் இறங்கி விடுகிறார்.
தமிழ்நாட்டில் பிரகாஷ்ராஜ், மாமல்லபுரம் அருகே விவசாய பண்ணை வைத்திருக்கிறார். அங்கு அவர் அடிக்கடி சொல்வது மாதிரி இயற்கை விவசாயம் செய்கிறார்.
பிளாட்டுகளாவும், பில்டிங்குகளாகவும், குவிக்கும் ஹீரோக்கள், ஹீரோயின்கள், ஓட்டலும், திருமண மண்டமும் கட்டும் ஹீரோக்கள் இவர்களை பின்பற்றலாமே...!!