தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஜெயம்ரவியுடன் நடித்த 5 நடிகைகளில் ஒருவராக அறிமுகமானவர் தன்சிகா. அதன்பிறகு அருண்விஜய் நடித்த மாஞ்சாவேலு உள்பட சில படங்களில் நடித்தார். படுகவர்ச்சியாக அவர் பிரவேசித்தபோதும் மார்க்கெட் எகிறவில்லை. அந்தசமயம்தான் பரதேசி படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் என்று டைரக்டர் பாலா தன்சிகாவை அழைத்தார்.
அம்மா வேடம் என்றபோதும், பாலா படமாச்சே என்று நடித்த தன்சிகாவுக்கு நல்ல பெயரே கிடைத்தது. அதையடுத்து யா யா படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்தவர், இப்போது மேலும் சில படங்களில் நடிக்க பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால், ஆடை விவகாரத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் குறைத்துக்கொள்கிறேன். சம்பளம் மட்டும் ஜாஸ்தியாக கொடுங்கள் என்று 30 முதல் 40 லட்சம் வரை கேட்கிறாராம்.
இதனால் சில படாதிபதிகள் தன்சிகாவின் பெயரைக்கேட்டாலே அலறிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சிம்புதேவன் இயக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கவும் தன்சிகாவை அணுகினார்களாம். அதற்கு, இப்போது முன்வரிசை நடிகர்களுடன் நடிக்கும் முயற்சியில் இருக்கிறேன். இந்த நேரத்தில் அருள்நிதி மாதிரி வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்தால் நான் அடுத்த லெவலுக்கு செல்ல முடியாது என்று மறுத்து விட்டாராம் தன்சிகா. அவரது இந்த பேச்சு திரையுலகில் பலருக்கு அவர் மீது பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.