விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
தேசிய விருது நடிகையான ப்ரியாமணிக்கு தமிழில் மருந்துக்குகூட படமில்லை. இதுதான் அவருக்கு பெரிய வருத்தமே. தெலுங்கு, கன்னடம், இந்தி என்று நடித்து வரும் தன்னை கோலிவுட் ஆசாமிகள் கண்டு கொள்ள மறுக்கிறார்களே என்று வேதனைப்பட்டு வரும் ப்ரியாமணி, தற்போது இந்தி படத்தில் குத்தாட்டம் ஆடுவது போன்று அடுத்து தமிழிலும் ரவுண்டு கட்டலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
அதனால், எதையாவது சொல்லி, பீல்டை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவர், தற்போது மீண்டும் பருத்தி வீரனில் நடித்த கார்த்தியுடன் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு விடவில்லை, பாரதிராஜா, மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து விட்டேன். ஆனால், ரஜினி, கமலுடன் ஒரு படத்தில்கூட நடிக்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
அதனால் அவர்களது படங்களில ஒரு பாட்டு அல்லது ஒரு கேரக்டரில் நடிக்கக்கூட ஆர்வமாக உள்ளேன் என்று மீடியாக்களில் செய்தி பரப்பி விட்டிருக்கிறார் ப்ரியாமணி. இதற்கிடையே, கோடம்பாக்கவாசிகள் தன்னை சுத்தமாக மறந்து விடக்கூடாது என்பதற்காக, சில சினிமா பார்ட்டிகளுக்கு அழையா விருந்தாளியாக ஆஜராகி விடுகிறாராம் நடிகை.