தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தில் அறிமுகமானவர் சிபிராஜ். அந்தப் படம் சரியாக போகாததால் ஹீரோவாக நிலைக்க முடியவில்லை. என்றாலும் சில படங்களில் தன் அப்பாவுடன் நடித்து வந்தார். அதன் பிறகு 4 கோடி ரூபாய் செலவில் மகனுக்காக லீ என்ற படத்தை தயாரித்தார் சிபியின் தந்தை. பிரபுசாலமன் இயக்கினார். அதுவும் சரியாக அமையவில்லை. கடைசியாக நாணயம் என்ற படத்தில் நடித்தார். தொடர் தோல்விகளால் சிபி ஒரு கட்டத்தில் நடிப்பதை நிறுத்தினார்.
இந்நிலையில் மீண்டும் இப்போது ஒரு படத்தில் நடிக்கிறார் சிபி. நாதாம்பாள் மூவீஸ் சார்பில் நாய்கள் ஜாக்கிரதை என்ற படம் தயாராகிறது. அதில் இரண்டாது ஹீரோவாக சிபி நடிக்கிறார். மெயின் ஹீரோவாக முக்கியமான ஹீரோ ஒருவர் நடிக்கிறார்.
இதுபற்றி சிபி கூறும்போது, "நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்கிறேன். 200 ஸ்கிரிப்ட் வரை கேட்டு இந்தக் கதையை தேர்வு செய்திருக்கிறேன். காமெடி திரில்லர் கதை. இதில் நான் செகண்ட் ஹீரோ, மெயின் ஹீரோவாக பவர்புல்லான ஒருவர் நடிக்கிறார். அவர் யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நாய்களும் நடிக்கிறது" என்றார்.