தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஸ்வரூபம் படம் மூலம் உலக அளவில் பேசப்படும் இயக்குனர், நடிகர் ஆகி விட்டார் கமல். அந்த படம் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டாலும், அவரது கருத்துக்கள் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில். இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடிக்கும் தருவாயில் இருக்கிறார் கமல்.
முந்தைய பாகம் சர்ச்சைகளை கிளப்பியதால்,. இந்த முறை எந்த மாதிரி இயக்கியிருக்கிறாரோ என்று விஸ்வரூபம் 2வை எதிர்பார்த்து ஒரு கூட்டமே காத்திருக்கிறது. ஆனால், கமல் ரொம்ப தெளிவானவர், இந்த முறை சிக்கலில் அவரை அத்தனை எளிதில் யாரும் சிக்க வைத்து விட முடியாது என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்க்ள். அதற்கேற்ப அவரும், இரண்டாம் பாகத்தில் சர்ச்சைகளை குறைத்து ரொமான்சுக்கு முதலிடம் கொடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தமிழில் நேரடி படங்களை இயக்கி வரும் கமல், எப்போது இந்தியில் படம் இயக்குவார் என்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது. அதற்கு கமல் பதில் அளிக்கையில், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழிகளிலும் படம் இயக்கும் ஆசை உள்ளது. அதிலும். விஸ்வரூபம் 2 வை இயக்கிய பிறகு இந்தியில் படம் இயக்க தயாரிப்பாளர் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக ஹாலிவுட்டுக்கு இணையாக இன்னொரு வித்தியாசமான படத்தை கொடுப்பேன் என்கிறார் கமல்.