ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அவன் இவன், பாகன் படங்களில் நடித்த ஜனனி அய்யர், அதையடுத்து புதிய படங்களுக்காக தீவிரமாக கதை கேட்டு வந்தார். அந்த நேரம் பார்த்து நடிகர் அதர்வாவுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதால் அதிர்ச்சியடைந்தவர், கோடம்பாக்கத்திலிருந்து எஸ்கேப்பாகி, மலையாள சினிமாவுக்கு சென்று விட்டார்.
அப்படி சென்றபோது த்ரி டாட்ஸ் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அங்கே ஆறு மாத காலமாக காலம் தள்ளிய ஜனனி அய்யர், இப்போது மீண்டும் கோலிவுட் கதவுகளை தட்டியிருக்கிறார். அதன்விளைவாக, தெகிடி என்ற படத்தில் நடிப்பதற்கு சான்ஸ் கிடைத்துள்ளது. அதனால் மீண்டும் தாய்மொழி தமிழில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார்.
இருப்பினும், தமிழில் எந்த ஹீரோக்களுடனும் தான் நெருக்கமாக பழகாத போதும், சில நாட்கள் மட்டுமே பழகிய அதர்வாவுடன் தன்னை இணைத்து காதல் கிசுகிசுக்கள் பரவிவிட்டதால் மனசுடைந்து போயிருக்கிறார் ஜனனி. அதன்காரணமாக, இனிமேல் தான் எத்தனை பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் இடைவெளி விட்டே பழகுவது என்ற முடிவில் இருக்கிறார். மேலும், இதற்கு முன்பு நடித்த படங்களில் துளியும் கிளாமராக நடிக்காத ஜனனி அய்யர், இனிமேல் கதைக்கு அவசியமென்றால் மிதமான கிளாமரை வெளிப்படுத்தவும் தான் தயாராகஇருப்பதாக இயக்குனர்களின் காது கடித்து வருகிறார் அம்மணி. இதனால் இதுவரை ஜனனியை ஏறெடுத்துப்பார்க்காத கமர்சியல் இயக்குனர்கள், இப்போது அவரை கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.