இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சோலார் பேனல் மோசடி வழக்கு சம்பந்தமாக அதன் உரிமையாளர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா மற்றும் நடிகை ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களை காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஷாலுமேனன், நான் கேரளாவில் பல நடன பள்ளிகள் நடத்தி வருவதோடு, சினிமாவிலும் நடித்து வருகிறேன். நான் சிறையில இருப்பதால் எனது பணிகள் கிடப்பில் கிடக்கின்றன. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக எப்போது வேண்டுமானாலும் கோர்ட்டில் ஆஜராகி விளக்கமளிக்கிறேன் என்று சொல்லி தனக்கு ஜாமீன் கேட்டு திருவனந்தபுரம் கோர்ட்டில் மனு கொடுத்திருந்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் ஷாலுமேனன் வெளியே சென்றால் சாட்சிகளை களைத்து விடுவார் என்று அவருக்கு எதிராக வக்கீல் வாதாடியதால், ஷாலுமேனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் தொடந்து சிறைவாசம் மேற்கொண்டு வருகிறார் ஷாலுமேனன்.