Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பட அதிபர் ரவிசங்கர் பிரசாத் மர்ம மரணம்: சினிமா உலகம் அதிர்ச்சி: நாளை படப்பிடிப்புகள் ரத்து

14 ஜூலை, 2013 - 13:18 IST
எழுத்தின் அளவு:

 திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனம் ஆனந்த் சினி சர்வீஸ். தென்னிந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட மிகப்பெரிய நிறுவனம். இதன் நிர்வாக இயக்குனராக அக்னினேனி ரவிசங்கர் பிரசாத் இருந்து வந்தார். இவர் ஜெமினி லேப் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த நிறுவனத்தை நடத்தியதுடன் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்தார். பாண்டிச்சேரி மாநிலத்திற்குட்பட்ட ஏனாமில் ஆனந்த் ரெசிடென்சி என்ற நட்சத்திர ஓட்டலையும் நடத்தி வந்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஏனாம் சென்ற அவர், தனது ஓட்டலில் தங்கி உள்ளார். கடந்த 6 நாட்களுக்கு முன்பு நடைப் பயிற்சிக்காக வெளியில் சென்றவர் பின்பு ஓட்டலுக்கு திரும்பவில்லை. இதுபற்றி ஓட்டல் மானேஜர் ஏனாம் போலீசில் புகார் செய்தார். அவர்கள் ரவிசங்கர் பிரசாத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் சவுபந்தலங்கா என்ற இடத்தில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் அவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உட‌லை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று சென்னை கொண்டுவரப்படும் ரவிசங்கர் பிரசாத்தின் உடல் சினிமா பிரமுகர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். நாளை அவரது இறுதி சடங்குகள் நடக்கிறது. ரவி பிரசாத்தின் மறைவையொட்டி நாளை (திங்கட்கிழமை) அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.

54 வயதே ஆன ரவிசங்கர் பிரசாத் கடன் பிரச்னைகளால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தொழில்போட்டியால் அவரை யாரும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரவிசங்கர் பிரசாத்தின் மரணம் தமிழ், மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Natarajan Iyer - chennai,இந்தியா
14 ஜூலை, 2013 - 20:23 Report Abuse
Natarajan Iyer வங்கி கடன் வாங்கி ஏமாற்றிய பரம்பரையில் வந்தவர்.
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
14 ஜூலை, 2013 - 18:45 Report Abuse
சு கனகராஜ் பெரும் புகழ் வாய்ந்தவர்களின் மரணம் மர்மமாகவே மாறிவிடுகிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in