தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
ராஞ்சனாவுக்கு பிறகு தனுஷின் கவுண்டவுன் மீண்டும் ஸ்டார்ட் ஆகியுள்ளது. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியான ராஞ்சனா இந்தியில் அமோக வெற்றி பெற்றிருப்பதால் அடுத்து இந்தியில் எந்த மாதிரியான படம் பண்ணலாம் என்று ஆலோசித்து வருகிறார் தனுஷ். அதோடு, இந்தியில் நடிக்கிற முதல் படம் வெற்றி பெற்றால் அடுத்தடுத்து நடிப்பது என்ற முடிவை ஏற்கனவே எடுத்திருந்த தனுஷ், இப்போது முதல் வெற்றியினால் இதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் புதிய கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் நினைக்கிறார்.
அதனால், ராஞ்சனாவில் நடித்து முடித்து வந்தவர், மரியானை முடித்தது மட்டுமில்லாமல் இப்போது நய்யாண்டி படத்தையும் முடித்துக்கொடுத்து விட்டாராம். இன்னும் பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். அடுத்த மாதம் கே.வி.ஆனந்த் படத்தில் நடிப்பதால்தான் இந்த மின்னல் வேகமாம். அதையடுத்து புதிய இந்திப்பட வேலைகளும் தொடங்குவதால் கே.வி.ஆனந்த் படத்தை முடிக்கிற வரை அக்கம் பக்கம் அசைவதாக இல்லையாம் தனுஷ். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று படப்பிடிப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கப்போகிறாராம்.