பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தற்போது பாலிவுட்டில முகாமிட்டுள்ள இலியானா, சினிமாவில் இருப்பது போன்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்கிறார். நானெல்லாம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் எனது பெற்றோர்தான் காரணம். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். என்னை தைரியமாக வளர்த்திருப்பதால் என்னால் எந்த விசயத்தையும் எதிர்கொள்ள முடிகிறது.
ஆனால், இன்றைக்கும் பல வீடுகளில் பெண்களுக்கு சுதந்திரம கொடுப்பதில்லை. ஏன் மேடைகளில் பெண் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசுபவர்களேகூட அவர்கள் வீட்டுப் பெண்களை கூண்டுக்கிளிகளாகத்தான் வளர்க்கிறார்கள். ஆண்களிடம் சகஜமாக பேசக்கூடாது. பழகக்கூடாது என்று ஒவ்வொரு வீட்டிலும் கண்டிசன் போடுகிறார்கள்.
இதனால்தான் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆண்களை கண்டாலே பயப்படும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் ஆண்களிடமும் சகஜமாக பழகும்போதுதான் அவர்களது ப்ளஸ் மைனஸ் நன்றாக தெரியும். ஒரு பிரச்னை என்றால் அதை சமாளிக்கும் முடியும். அதனால் இந்த இந்திய பெற்றோர்கள் ரொம்பவே மாற வேண்டும் என்று சமூகத்துக்கு குரல் கொடுக்கிறார் இலியானா.