இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தற்போது பாலிவுட்டில முகாமிட்டுள்ள இலியானா, சினிமாவில் இருப்பது போன்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்கிறார். நானெல்லாம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் எனது பெற்றோர்தான் காரணம். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். என்னை தைரியமாக வளர்த்திருப்பதால் என்னால் எந்த விசயத்தையும் எதிர்கொள்ள முடிகிறது.
ஆனால், இன்றைக்கும் பல வீடுகளில் பெண்களுக்கு சுதந்திரம கொடுப்பதில்லை. ஏன் மேடைகளில் பெண் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசுபவர்களேகூட அவர்கள் வீட்டுப் பெண்களை கூண்டுக்கிளிகளாகத்தான் வளர்க்கிறார்கள். ஆண்களிடம் சகஜமாக பேசக்கூடாது. பழகக்கூடாது என்று ஒவ்வொரு வீட்டிலும் கண்டிசன் போடுகிறார்கள்.
இதனால்தான் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆண்களை கண்டாலே பயப்படும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் ஆண்களிடமும் சகஜமாக பழகும்போதுதான் அவர்களது ப்ளஸ் மைனஸ் நன்றாக தெரியும். ஒரு பிரச்னை என்றால் அதை சமாளிக்கும் முடியும். அதனால் இந்த இந்திய பெற்றோர்கள் ரொம்பவே மாற வேண்டும் என்று சமூகத்துக்கு குரல் கொடுக்கிறார் இலியானா.