தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நம்ம ஊர் நாசர் மாதிரி மலையாளத்தில் புகழ்பெற்ற குணசித்திர நடிகர் சலீம் குமார், ஹீரோ, வில்லன், காமெடியன் என அனைத்து கேரக்டர்களிலும் புகுந்து விளையாடக்கூடியவர். பல்வேறு விருதுகளை பெற்ற சலீம் குமார். ஆதாமின்ட மகன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். 230 மலையாளப் படஙங்களுக்கு மேல் நடித்துள்ள அவரை இப்போது தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். ஜில்லுன்னு ஒரு காதல் இயக்கிய கிருஷ்ணா. தற்போது கிருஷ்ணா இயக்கி வரும் நெடுஞ்சாலை படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் சலீம்குமார்.
" அவர் ஒரு அற்புதமான நடிகர். அவரை ஏன் தமிழ் சினிமா இதுவரை பயன்படுத்திக்கலைன்னு தெரியல. மகிழ்ச்சி, கோபம், துக்கம், அழுகை இப்படி எந்த உணர்ச்சியை சொன்னாலும் அதை நான்கைந்து விதமாக நடித்துக் காட்டி எது தேவைன்னு கேட்ப்பார். இந்தப் படத்துல அவருக்கு முக்கியமான கேரக்டர். படம் ரிலீசுக்குப் பிறகு சலீம்குமார் தமிழில் ஒரு ரவுண்டு வருவார்" என்கிறார் கிருஷ்ணா.