டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில ஒருவருக்கு ஒரு திறமை இருப்பதே பெரிய விஷயம். ஆனால் நடிகராக மட்டுமில்லாமல், டைரக்டர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை அமைப்பாளர், வசனகர்த்தா என சகலமும் தெரிந்த சகலாகலா என்றால் அது நம்ம டி.ராஜேந்தர் தான். தனது மகன் சிம்புவும் சினிமாவில் இருந்தாலும், அவ்வப்போது டி.ஆரும் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார்.
டி.ராஜேந்தர் இப்பவும் இளமை துடிப்போடு இன்றைய இளம் நடிகர், நடிகையருக்கு சவால் விடும் வகையில் ஆட்டத்தில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார். ராம நாராயணன் இயக்கத்தில் ஆர்யா சூர்யா என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் டி.ராஜேந்தர், கவர்ச்சி நடிகை மும்மைத்கான் உடன் ஒரு செம குத்தாட்டம் போட்டுள்ளார். மேலும் அந்த குத்துப்பாட்டை அவரே பாடவும் செய்துள்ளார். இப்பவும் யூத்புல்லாக, எனர்ஜிட்டிக்காக இருக்கும் டி.ஆரின், எனர்ஜிக்கான பேட்டி இதோ...
* உங்க பேருக்கு பின்னால், எம்.ஏ., என, போடுறீங்களே?
நான், பல படங்களுக்கு பாடல் எழுதிருக்கேன். ஆனா,பேருக்குபின், கவிஞர் என, போட்டது இல்லை.எம்.எல்.ஏ.,வான பின் கூட,பேருக்கு பின், எம்.எல்.ஏ., என, போட்டதில்லை. இந்தபதவிகளெல்லாம், நிரந்தரமானதல்ல. அப்பப்ப, வரும், போகும்.ஆனா, படிச்ச படிப்பு, எப்போதும் நம்மோட தான் இருக்கும்.அதனால், பேருக்கு பின், எம்.ஏ., என, போடுறேன்.
* பந்தா, பகட்டு, ஆடம்பரத்தில்நம்பிக்கை உண்டா?
கண்டிப்பாக இல்லை.சில பேர்,கொஞ்சம் பணம் வந்தா,காலரைதூக்கி விட்டுக்கிறான். ஆளே மாறிப் போயிடுறான். ஆனா,என் முதல் படம் ரிலீசானதிலிருந்து, இப்போ வரைக்கும், நான் மாறவே இல்லை. என்னைமதிக்காதவர்கள், மன்னாதிமன்னராக இருந்தாலும்,அவங்க வீட்டு வாசலைக்கூட, மிதிக்க மாட்டேன்.மதிப்பவர்கள், மண் குடிசையிலிருந்தாலும், அவர்களை தேடிப் போவேன்."சுயமரியாதையை விட்டுவிட்டு வாஎன, சொர்க்கத்திலிருந்து அழைப்பு வந்தாலும் கூட, சொர்க்கமேவேண்டாம், சுங்குவார்சத்திரத்தில், சுக்கு காபி கிடைத்தால் போதும் என,நினைப்பவன் நான்.
* சிறிய பட்ஜெட்டில் படங்கள் வெளியாவது குறித்து?
சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்தால்,அவங்களை கீழ்த்தரமா பார்க்ககூடாது. 20 கோடி, 30 கோடியில் படம் எடுத்து, அதில் கிடைக்கும்லாபத்தை விட, சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்து, அதிகமா யார் லாபம் பார்க்கிறாங்களோ, அவங்க தான், திறமையானவங்க.
* "ஆர்யா-சூர்யா படத்தில், குத்தாட்டம்ஆடியிருக்கீங்கலாமே?
ஆமாம். நடிகை முமைத்கானுடன், "ரங்கு ரக்கற, ரங்குரக்கற என்ற பாடலுக்கு, செமையா ஒரு குத்தாட்டம் போட்டுருக்கேன். நான், டான்சுஆடின வேகத்தைபார்த்துட்டு,பாவம், அந்த பொண்ணுக்கு,இரண்டாவது நாளே,காய்ச்சல் வந்துருச்சு.அப்புறம்,மாத்திரை, மருந்தெல்லாம் சாப்பிட்டுவந்து, மறுபடியும், பட்டையை கிளப்புச்சு.
* கொஞ்சம் இளைச்ச மாதிரி தெரியுதே?
எல்லாரும், அப்படித் தான் கேக்குறாங்க. இப்போ, உடம்பைமெயின்டெயின் பண்ண ஆரம்பிச்சுருக்கேன். என் பேர், டி. ஆர்., ஆக இருந்தாலும், நான், டீ கூட, குடிக்கிறதில்லை. "பையன் ஹீரோவா நடிக்கும்போது, நீங்களும் ஹீரோவா நடிக்கி றீங்களே என, கேட்க கூடாது. அவர் பாதை வேறு;என் பாதை வேறு. நிறைய பேர், இப்போ,"விக் வைச்சுட்டு நடிக்கும் போது, நான், "விக் இல்லாமல்நடிக்கிறேனே, அது போதாதா? ஸ்கிரிப்ட் இல்லாம 24 மணி நேரம் பேச நான் தயார், எனக்கு திறமை இருக்கு, எந்த சப்ஜெக்ட் பேசனும் சொல்லுங் பேசுறேன்.
* தற்போதைய தமிழ் சினிமா பற்றி...?
இப்போது படம் எடுக்கிறதை விட எப்படி போய் சேர்க்ணும் என்ற வியாபார நுணுக்கம் ரொம்ப முக்கியம். பெரிய பட்ஜெட் படங்களே தள்ளாட்டத்தில் இருக்கு, பட்ஜெட்ல எடுக்கிற படங்கள் சூப்பர் ஹிட் ஆகுது. தமிழ் சினிமா இப்போ நல்ல ஆரோக்ய பாதையில் போயிகிட்டு இருக்கு.