ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சக நடிகர்கள் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் அஜீத். கடந்த ஆண்டு வரை அஜீத்தை விஜய்யின் போட்டி நடிகராக பாவித்து வந்தனர் ரசிகர்கள். தனக்கும், விஜய்க்குமிடையே நல்லுறவு இருப்பதை அவர் கூறியபோதும் இரண்டுபேரின் ரசிகர்களும் ஆங்காங்கே மோதிக்கொண்டனர். இது பிடிக்காத அஜீத், உடனடியாக தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார். அப்பா-அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருங்கள் அதுபோதும் என்று அன்பான வார்த்தை சொல்லி ரசிகர்களை அமைதிப்படுத்தினார்.
அதையடுத்து, விஜய், நடித்த படங்களில் ஸ்பாட்டுக்கு செல்வது, அவர் நடித்த படத்தை பார்த்து விட்டு கருத்து சொல்வது என்று நட்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இப்போது சூர்யாவும் அஜீத்தின் நட்பையும், அவர் தனது படங்களில் எடுத்து வரும் ஓவர் ரிஸ்க்கையும் பெருமையாக சொல்லி வருகிறார். அவர் மாதிரியெல்லாம் யாரும் ரிஸ்க் எடுக்க முடியாது என்றும் சொல்லி அஜீத் தனக்கு பிடித்தமான ஹீரோ என்பதை ஓப்பனாக சொல்லி வருகிறார் சூர்யா.