ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாகை சூடவா படத்தில் நடித்தபோது மலையாளத்தில் இருந்த தமிழுக்கு வந்து கொடி நாட்டிய அசின், நயன்தாரா, அமலாபால் போன்று முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் இனியா. ஆனால், அந்த படத்தையடுத்து அவருக்கு மெளனகுரு, அம்மாவின் கைபேசி, மாசாணி, கண்பேசும் வார்த்தைகள் என பல படங்கள் கிடைத்தபோதும், அவரது மார்க்கெட் எகிறவில்லை.
காரணம், அவர் கிளாமராக நடிக்க மறுக்கிறார் என்று சிலர் சொன்னார்கள். அதனால் தான் கிளாமராக நடிக்கவும் தயாராக இருப்பதை உணர்த்த கண்பேசும் வார்த்தைகள் படத்தில் தொடையளவு கவர்ச்சி காட்சி, பெட்ரூம் சீனில் விரகதாப உணர்ச்சிகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி நடித்திருந்தார் இனியா.
ஆனால், அதைப்பார்த்து தமிழில் அவருக்கு சான்ஸ் கிடைக்காதபோதும், மலையாளத்தில் இருந்துதான் வாய்ப்புகள் குவிந்தன. அதனால் இங்கிருந்து தாய்மொழிக்கு தாவி விட்ட இனியா, இப்போது அரை டஜன் மலையாளப்படங்களில் நடித்து வருகிறார். அதில், லால் என்ற நடிகருக்கு மனைவியாக நடித்துள்ள அயால் என்ற படத்தில் ஆபாச நடிகையாக உருவெடுத்துள்ளாராம். குறிப்பாக, பெட்ரூம் காட்சியில் இதுவரை எநத மலையாள நடிகைகளும் காட்டாத தாராளத்தைக்காட்டி நடித்துள்ளாராம். இதனால், இப்போது இனியாவை புக் பண்ண செல்லும் இயக்குனர்கள் கண்டிப்பாக பெட்ரூம் சீனோடுதான் செல்கிறார்களாம்.