Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிர்பாருங்கள் எதிர்பார்க்காததை ‘மாயை’ மர்மம்!!- நிஜத் தயாரிப்பாளர் யார்?

08 ஜூலை, 2013 - 17:48 IST
எழுத்தின் அளவு:

‘‌மாயை’ என்னும் பெயரில் ‘இம்மாத வெளியீடு’ என்னும் அறிவிப்புடன் கடந்த சில மாதங்களாகவே விளம்பரப்படுத்தப்பட்டு வரும் புதிய படம் உருவான விதமும் வெளியாகவுள்ள விதமும்கூட பெரிய ‘மாயை’ ஆக இருக்கும்போல...

அதாகப்பட்டது, புதுமுக இயக்குனர் ஜெ.ஆர்.கண்ணன் இயக்கத்தில் வளரும் நடிகர் ஷான் என்னும் சஞ்சய், ‘அம்புலி-3டி’ நாயகி சனம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ராஜ்கபூர், பாத்திமாபாபு உள்ளிட்டோருடன் அறிமுக இயக்குநர் ஜெ.ஆர்.கண்ணனும் ஒரு கதாநாயகராக நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் ‘மாயை’! இப்படத்திற்கு முதலில் ‘மை’ எனப் பெயர் சூட்டப்பட்டு ‘சென்னை புராடக்ஷன்ஸ்’ என்னு்ம பேனரில் இப்படத்தை எழில் இனியன் என்னும் புதியவர் (‘மாயை’ படத்தை தயாரித்ததுடன் இதில் கதாநாயகி சனத்தின் தந்தை கேரக்டரிலும் நடித்திருக்கிறார். ஆர்.ஜி.சேகர் என்னும் தயாரிப்பு நிர்வாகி மூலம் இயக்குநர் ஜெ.ஆர்.கண்ணன், எழில் இனியனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, கதை கேட்கப்பட்டு 30 லட்சம் பணத்தை எழில் இனியனும் மேலும் ஒரு 10 லட்சத்தை முத்து என்னும் நண்பரும் முதலீடு செய்வதாக அக்ரிமென்ட் தயார் செய்யப்பட்டு டிஜிட்டலில் படப்பிடிப்பும் ஆரம்பமானது!

‘சை’ என்னும் சொல்லுக்கு தமிழில் பெரிய அர்த்தம் எதுவும் இல்லாததால் ‘மாயை’ என்னும் பெயர்மாற்றமும் நிகழ்ந்தது. இயக்குனர் ஜெ.ஆர்.கண்ணனுக்கு முதல் தயாரிப்பாளர் எழில் இனியனை அறிமுகம் செய்து வைத்த தயாரிப்பு நிர்வாகி ஆர்.ஜி.சேகர்தான் ‘சை’ என்னும் ‘மாயை’ படத்தின் புரடக்ஷன் மானேஜரும் கூட! இந்த தயாரிப்பு நிர்வாகி தயாரிப்பாளர் எழில் இனியனுக்கு சாதகமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் இயக்குநர் கண்ணனால் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மொத்த படப்பிடிப்பும் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்தபின்பு ‌கதாநாயகி சனம் சரியாக நடிக்கவில்லை... என்று இயக்குநர் ஜெ.ஆர்.கண்ணனால் சால்ஜாப்பு சொல்லப்பட்டு ரீ-ஷுட்டுக்கு ரெடியாகி இருக்கிறார்கள்.

அதுவும் ‘அம்புலி’ நாயகி சனத்திற்கு பதில் அவர் நடித்த பாத்திரத்தில் ‘காதல்’ சந்தியாவை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றதுமே இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ‘பட்ஜெட்’ எகிறியதால் முட்டிக் கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி சந்தியாவை ஒப்பந்தம் செய்து கூட்டிக்கொண்டு போய் ஊட்டியில் ஷுட்டிங்கை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர். கவர்ச்சி உடை என்பதால் முதல்நாளே நடிக்க மறுத்து கிளம்பி போயே போய்விட்டார் சந்தியா. இதனால் படப்பிடிப்பு நின்று நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட, இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் தகராறு!

‘‘உடனடியாக இந்தப்படத்‌தை நானே பார்த்துக்கொள்கிறேன். உங்கள் பணத்தை 6 மாதத்தில் செட்டில் செய்துவிடுகிறேன்’’ என்றிருக்கிறார் இயக்குநர் ஜெ.ஆர்.கண்ணன். கூடவே 2 லட்சத்தை முன்பணமாக கொடுத்து ஒரு அக்ரிமென்ட்டையும் தயாரிப்பாளர் எழில் இனியனுடன் போட்டுக்கொண்ட இயக்குநர், அதன்பிறகு ‘சென்னை புரடக்ஷன்ஸ்’ எழில் இனியனை என்ன? ஏதென்று இதுவரை கேட்காமலேயே, படத்திற்கு தானே தயாரிப்பாளர் என்பது மாதிரியும் தனது ‘ஹாலம்மா டாக்கிஸ்’ தயாரிப்பில் ‘டைம் மெஷின் மீடியாஸ்’ களஞ்சியம் திரைக்களம் வழங்க தயாரித்து வெளியிடுவது மாதிரியும் விளம்பரப்படுத்தி வருகிறார்!

ஆறு மாதத்தில் தான் செலவு செய்த 30 லட்சத்தில் 24 லட்சத்தை திருப்பி தருவதாக இயக்குநர் ஜே.ஆர்.கண்ணன் உறுதியளித்து ஒன்றரை வருடம் ஆகியும் இதுவரை திருப்பித்தராமல் ‘மாயை’ படத்தை விற்க முயற்சிப்பதைப் பார்த்தும், வெளியிட முயற்சிப்பதைப் பார்த்தும் வெகு‌ண்டெழுந்த ‘சென்னை புரடக்ஷன்ஸ்’ எழில் இனியன் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருப்பதுடன் சட்டரீதியாகவும் ‘மாயை’ திரைப்படத்தை முடக்கும் முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறார். பணம் எதுவும் கேட்காமல் ‘மாயை’ படத்தை எழுதி இயக்கி இருக்கும் ஜெ.ஆர்.கண்ணனின் தயாரிப்பாளர் அவதாரம் கண்டு கோடம்பாக்கமே மூக்கின் மேல் விரல் வைக்கிறதென்றால் பாருங்களேன்?!

‘‘எதிர்பாருங்கள் எதிர்பார்க்காததை’’ இது ‘மாயை’ திரைப்படத்தின் விளம்பர வாசகம்! இந்த சூசகமான வாசகம் இப்படத்தின் ரிலீசுக்கும் பொருந்தும்போல் தெரிகிறது! என்கின்றனர் விவரமறிந்தவர்க்ள! அதையும் பார்ப்போம்!!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in