டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டைரக்டர் சசியின் ‘‘பூ‘‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி. முதல்படத்திலேயே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தாலும் தமிழ் சினிமாவில் அவர் அதற்கு அடுத்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஏன் என்று கேட்டால் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன். சும்மா ஏனோ தானோ என்று கவர்ச்சி பதுமையாக வந்து போக விரும்பவில்லை. ஒரு படம் நடித்தாலும் அது ‘‘பூ‘‘ மாதிரி இருக்க வேண்டும் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது தனுஷின் "மரியான்" படத்தின் மூலம் ‘ரீ‘-என்ட்ரி கொடுத்துள்ள பார்வதி, தனுஷ் உடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளதாவது, தனுஷின் ‘‘ஆடுகளம்‘‘ பார்த்திருக்கேன். கதைக்கு ஏற்றார் போல் இயல்பாக நடிக்கும் திறமை உள்ளவர். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகழ்ச்சி. சினிமாவில் எவ்வளவு பெரிய ஷாட், ரிஸ்க் இருந்தாலும் அதற்கு ஏற்ற ரிஸ்க் எடுக்க கூடியவர். இயக்குனர் எதிர்பார்ப்பதை விட அதிகமாக நடித்து கொடுப்பவர். இன்றைய இளம் ஹீரோக்களில் சற்று வித்தியாசமானவர். இந்த இளம் வயதிலேயே கல்யாணம் முடித்து பிள்ளைகள் எல்லாம் பெற்று சினிமாவிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கும் கிடைக்காது. அவருடன் நடித்ததை மறக்க முடியாது. மீண்டும் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். மொத்தத்தில் தனுஷ் ஒரு ஸ்வீட் ஹீரோ என்று கூறியுள்ளார்.