தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆடுகளம் ஹிட்டுக்குப்பிறகு தனுஷ் நடித்த படங்கள் ஓடாததால், அவரிடம் கதை சொல்லவே முன்னணி இயக்குனர்கள் தயங்கினர். ஆனால், இப்போது நிலைமையே வேறு. ராஞ்சனா இந்தி படத்தில் நடித்தாலும் நடித்தார். தனுஷிடம் கதை சொல்ல டயம் கேட்டாலே ஒரு பதிலும் சொல்ல மாட்டேன் என்கிறாராம். ப்ரீ ஆனதும் நானே போன் பண்றேன் என்று சொல்பவர் அதன்பிறகு போன் பண்ணுவதே இல்லையாம்.
அதையடுத்து அவரை சந்திப்பதற்கு அவரது அலுவலகத்தை அணுகினார், சார் ஒரு ஸ்டோரி டிஸ்கஷனுக்காக மும்பை போயிருக்கிறார். எப்ப வர்றாருன்னே தெரியலையே என்கிறார்களாம். இதனால் கதை சொல்ல நினைக்கும் இயக்குனர்கள், இந்தியில் நடிக்க கதை விவாதம் நடத்தி வருபவர் நம்மளிடம் எங்கே கதை கேட்கப்போகிறார் என்று ரிட்டனாகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், அடுத்து தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கயிருக்கும் தனுஷ், அப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதோடு, படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார்களாம். மேலும், இனி தமிழ், இந்தி என எந்த மொழிப்படத்தில் நடித்தாலும் பிரமாண்ட பட்ஜெட் கதைகளில் மட்டுமே நடிப்பது என்றும் தனுஷ் முடிவெடுத்திருப்பதாக அவரது வட்டாரம் தகவல் தருகிறது.