டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பத்து பேர் ஒரே மாதிரியாக உடையணிந்து அதில் ஒருவர் மட்டும் அவர்களிடமிருந்து மாறுபட்ட உடையணிந்தாலே மற்றவர்களின் கவனம் அவர் மீது திரும்புவது இயற்கையான விசயம்தான். அப்படித்தான், இதுநாள்வரை பேண்ட்-சட்டையிலேயே தனது பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தனுஷ், திடீரென்று அம்பிகாபதி பிரஸ்மீட்டிற்கு வேஷ்டி சட்டையில் என்ட்ரி கொடுத்ததும் அனைவரும் அவரை ஆச்சர்யமாக பார்த்தனர்.
அதோடு, அப்பட நாயகி சோனம் கபூரும் புடவை கட்டி வந்திருந்தார். கட்டிய புடவை அங்குமிங்கும் நழுவிக்கொண்டேயிருக்க, அதை அவ்வப்போது சரி செய்வதே அவருக்கு பெரிய வேலையாக இருந்தது. அதனால் அவரையும் அனைவரும வேடிக்கை பார்த்தனர்.
அதைப்பார்த்த தனுஷ், என்ன அப்படி பார்க்கிறீர்கள். நான் நம்ம ஊர் வேஷ்டி அணிந்து வந்திருக்கிறேன். சோனம் நம்ம ஊர் புடவையை கட்டி வந்திருக்கிறார். எத்தனை விதவிதமான உடைகள் அணிந்தாலும், நம்ம பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தாலே தனி மரியாதைதான். அதோடு ரொம்ப பெருமையாகவும் இருக்கிறது என்றார் தனுஷ்.
மேலும், இனி நம்ம ஊர் மட்டுமின்றி, மும்பையில் நடக்கும் பட விழாக்கள் என்றாலும் வேஷ்டி அணிந்தே செல்வது என்ற முடிவில் இருக்கிறேன் என்றும் கூறிய தனுஷ், வேஷ்டி அணிவது மற்ற உடைகளை விட ரொம்ப எளிமையானது, ரொம்ப வசதியானதும்கூட என்றார்.