ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் படத்துக்குப்படம் ஹீரோக்களை காதலிப்பது போல் நடித்து வரும் ப்ரியா ஆனந்துக்கு நிஜத்திலும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதுபற்றி அவர் கூறுகையில், வாமனன் படத்தில் சினிமாவுக்கு வந்த என்னை, காதலிப்பது போல் நடிக்க சொன்னபோது, அந்த காதலி வேடத்தில் என்னால் முழுசாக கலந்து நடிக்க முடியவில்லை. ஏதோ நடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி வரை இப்போது நடித்து விட்டேன். காதல் என்றால் என்ன என்பதையும் உணர்ந்துவிட்டேன். ஆனால், சினிமாவில் காதலிப்பது போன்று நடிக்கத்தானே முடியும். அதனால் நிஜ வாழ்க்கையிலும் மனசுக்கு பிடித்தமான ஒருவரை காதலிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் ப்ரியாஆனந்த்,
அப்படியென்றால் காதலர் வேண்டுமே? இப்போது சினிமாவில் பிசியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லைதான். என்றாலும், காதலர் என்ற ஒருவர் என்முன் தோன்றும்போது, ஆசை தீர காதலிப்பேன். பல ஆண்டுகள் அவரை காதலித்து விட்டு பின்னர் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்துக்கு சிலரைப்போன்று தொழிலதிபர் மோகமெல்லாம் இல்லையாம். தன்னுடன் நடிக்கும் சக நடிகராக இருந்தாலும் மனசுக்குப்பிடித்தவராக இருந்தால் அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்வாராம்.