டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் படத்துக்குப்படம் ஹீரோக்களை காதலிப்பது போல் நடித்து வரும் ப்ரியா ஆனந்துக்கு நிஜத்திலும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதுபற்றி அவர் கூறுகையில், வாமனன் படத்தில் சினிமாவுக்கு வந்த என்னை, காதலிப்பது போல் நடிக்க சொன்னபோது, அந்த காதலி வேடத்தில் என்னால் முழுசாக கலந்து நடிக்க முடியவில்லை. ஏதோ நடித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்.
அதையடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி வரை இப்போது நடித்து விட்டேன். காதல் என்றால் என்ன என்பதையும் உணர்ந்துவிட்டேன். ஆனால், சினிமாவில் காதலிப்பது போன்று நடிக்கத்தானே முடியும். அதனால் நிஜ வாழ்க்கையிலும் மனசுக்கு பிடித்தமான ஒருவரை காதலிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் ஏற்பட்டிருக்கிறது என்கிறார் ப்ரியாஆனந்த்,
அப்படியென்றால் காதலர் வேண்டுமே? இப்போது சினிமாவில் பிசியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லைதான். என்றாலும், காதலர் என்ற ஒருவர் என்முன் தோன்றும்போது, ஆசை தீர காதலிப்பேன். பல ஆண்டுகள் அவரை காதலித்து விட்டு பின்னர் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் ப்ரியாஆனந்துக்கு சிலரைப்போன்று தொழிலதிபர் மோகமெல்லாம் இல்லையாம். தன்னுடன் நடிக்கும் சக நடிகராக இருந்தாலும் மனசுக்குப்பிடித்தவராக இருந்தால் அவரையே காதலித்து திருமணம் செய்து கொள்வாராம்.