தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் தான் நான் ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன்; ஆனால் நிஜவாழ்க்கையில் என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் தனுஷ், இப்போது இந்தியிலும் தனது முதல்படமான ராஞ்சனா மூலம் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். சமீபத்தில் ரிலீஸான இப்படம் இந்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் தனுஷ்க்கு இந்தியில் மவுசு கூடியுள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ்க்கும்-சோனம் கபூருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உருவாகி இருப்பதாக பாலிவுட் மீடியாக்கள் பாராட்டி வருகின்றன.
இந்நிலையில் ரொமான்ஸ் பற்றி நடிகர் தனுஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படி கூறியிருக்கிறார். அதாவது, ‘‘நான் சினிமாவில் மட்டுமே ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன். நிஜவாழ்க்கையில் அப்படி இல்லை. இதனால் என் மனைவி தான் ரொம்ப பாவம், என்னை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறேன், ஆனால் மனைவிக்குதான் நல்ல கணவனாக இருக்க முடியவில்லை, அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை, நான் நல்ல கணவன் கிடையாது,’’ என்று கூறியுள்ளார்.