‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சினிமாவில் தான் நான் ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன்; ஆனால் நிஜவாழ்க்கையில் என் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார். தமிழில் மட்டுமே அசத்தி கொண்டிருந்த நடிகர் தனுஷ், இப்போது இந்தியிலும் தனது முதல்படமான ராஞ்சனா மூலம் எல்லோரையும் கவர்ந்துவிட்டார். சமீபத்தில் ரிலீஸான இப்படம் இந்தியில் சூப்பர்-டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இதனால் தனுஷ்க்கு இந்தியில் மவுசு கூடியுள்ளது. அதுமட்டுமின்றி தனுஷ்க்கும்-சோனம் கபூருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உருவாகி இருப்பதாக பாலிவுட் மீடியாக்கள் பாராட்டி வருகின்றன.
இந்நிலையில் ரொமான்ஸ் பற்றி நடிகர் தனுஷ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படி கூறியிருக்கிறார். அதாவது, ‘‘நான் சினிமாவில் மட்டுமே ரொமான்ஸ் நாயகன் என்று பெயர் எடுத்துள்ளேன். நிஜவாழ்க்கையில் அப்படி இல்லை. இதனால் என் மனைவி தான் ரொம்ப பாவம், என்னை அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவாக இருக்கிறேன், ஆனால் மனைவிக்குதான் நல்ல கணவனாக இருக்க முடியவில்லை, அவருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை, நான் நல்ல கணவன் கிடையாது,’’ என்று கூறியுள்ளார்.