டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக களமிறங்கி கதாநாயகி அந்தஸ்தை பிடித்தவர் சில்க்ஸ்மிதா. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்தவர். இதில் கமலுடன் நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே யம்மா என்ற பாடல் சில்க்கை பெரிய இடத்துக்கு கொண்டு சென்றது. அதன்பிறகுதான் அவரது மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.
ஆனால், மார்க்கெட் பீக்கில் இருந்த நேரத்தில் திடீரென ஒருநாள் சில்க் இறந்து விட்டார். அவரது இறப்பு கொலையா? தற்கொலையா? என்ற சர்ச்சைகள் அப்போது எழுந்தது. ஆனால், தற்கொலையாகவே முடிக்கப்பட்டது. இந்த நிலையில், சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி இந்தி, தமிழ், மலையாளத்தில் படங்கள் வெளியாகின, அந்த படங்களில் வித்யாபாலன், சனாகான் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஆனால், சில்க்ஸ்மிதாவின் ஜெராக்ஸ் போன்று இருக்கும் ஜூனியர் பிந்துமாதவியை மறந்தே விட்டார்கள். அதுதான் பிந்துமாதவிக்கு பெரிய வருத்தமாக உள்ளதாம். மேலும், அடுத்து சில்க் பாணியில் யாராவது படம் பண்ணினால் அவர்களை சந்தித்து சான்ஸ் கேட்பேன் என்று கூறிவரும் பிந்துமாதவி, இனிமேல் குடும்ப நடிகை என்கிற முத்திரையை கழட்டி எறிந்து விட்டு, சில்க்ஸ்மிதா போன்று கிளாமர் நாயகியாகவும் அவதரிக்கப்போகிறாராம்.