‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
சென்னையிலுள்ள ஒரு கனரா வங்கியில் போலி ஆவணங்களைக்காட்டி 18.5 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் கைதானவர் நடிகை லீனா மரியா பால். இந்த மோசடியில் லீனாவின் காதலர் சுதேஷ் சந்திரபோசுக்கும் பங்கு உண்டாம். ஆனால், லீனா கைது செய்யப்பட்டதும் அவர் தலைமறைவாகி விட்டார். அதனால், தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆனால், இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லீனாமரியாவோ, தனக்கும் இந்த மோசடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வழக்கை திசை திருப்பி விட்டுள்ளார். அதோடு, என் காதலன் சுதேஷ்சந்திரபோஸின் ஆசை நாயகியாக மட்டுமே நான் இருந்து வந்தேன் என்று மொத்த மோசடிகளையும் காதலர் மீது திருப்பியிருக்கிறார். அதோடு, தனக்கு ஜாமீன் கேட்டும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் லீனா.
ஆனால் அவரது மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணை முழுவதும் முடிந்த பிறகுதான் இதுபற்றி முடிவெடுக்க முடியும் என்று சொல்லி, மனுவை தள்ளுபடி செய்து விட்டாராம்.