ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
நடிகர் விஷால் செல்லமே படத்தில் நடிப்பதற்கு முன்பு, நடிகர் அர்ஜூன் இயக்கி நடித்த ஏழுமலை உள்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஏராளமான ஸ்கிரிப்ட்டுகளை தயார் செய்து வந்திருக்கிறார் விஷால்.
அந்த சமயத்தில், தயாரிப்பாளரான விஷாலின் தந்தை ஒரு படத்தை தயாரிக்க சில நடிகர்களின் கால்சீட் கேட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது அங்கே சென்ற ஒரு சினிமா நபர், வீட்டிலேயே ஹீரோவை வைத்துக்கொண்டு எதற்காக வெளியில் தேடுகிறீர்கள் என்று விஷாலைப்பார்த்து சொன்னாராம். அப்படித்தான் விஷால் எதிர்பாராதவிதமாக ஹீரோவாகியிருக்கிறார். அதையடுத்து அர்ஜூனிடத்தில உதவியாளராக செல்வதை நிறுத்தியுள்ளார் விஷால்.
ஆனாலும், அவர்கள் இரண்டு பேர் குடும்பத்துக்கும் நல்ல நட்பு இருந்து வந்திருக்கிறது. அதனால்தான், பட்டத்து யானை படத்துக்கு கதாநாயகி தேடியபோது, ஏன் அர்ஜூன் சார் மகள் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்கக்கூடாது என்று வீட்டிற்கு சென்றிருக்கிறார் விஷால். என்றாலும், ஒருவேளை நாம கேட்டு அவர்கள் மறுத்து விட்டால் என்ன செய்வது என்று பயந்த விஷால், தயங்கி தயங்கி இந்த விஷயத்தை ஓப்பன் பண்ணியிருக்கிறார்.
அதைக்கேட்ட அர்ஜூன், அவருக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடிக்கட்டும் என்று சொல்லி, ஐஸ்வர்யாவிடம் கேட்டிருக்கிறார். ஏற்கனவே விஷால் தெரிந்த நபர் என்பதால் உடனே ஓ.கே சொல்லிவிட்டாராம் ஐஸ்வர்யா. இப்படித்தான் பட்டத்து யானையில் விஷாலுக்கு ஜோடியானாராம் ஐஸ்வர்யா. மேலும் நடிப்பில் ஐஸ்வர்யா மீன்குஞ்சு என்பதால், முதல் படம் மாதிரி இல்லாமல் நன்றாக நடித்தாராம். அதனால் அவரை நடிக்க வைத்ததும் எனக்கு பெருமையாக உள்ளது என்கிறார் விஷால்.