இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். அதையடுத்து பல படங்களுக்கு இசையமைத்தவர். ரஜினியின் குசேலன் படத்திற்கு பிறகு பாலாவின் பரதேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி, விஜய்யின் தலைவா என முன்னணி இயக்குனர், நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து இப்போது முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக பாடகி சைந்தவியை காதலித்து வந்தார் ஜி.வி.பிரகாஷ்குமார். அவரது இசையில் சைந்தவி நிறைய பாடல்கள் பாடியதை அடுத்து அவர்களின் காதல் இன்னும் உறுதியானது. இதையடுத்து அவர்களின் பெற்றோருக்கும் காதல் தெரிந்தபோது, யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நேற்று சென்னையில் ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவியின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் செட்டியார் மண்டபத்தில் காலை 10 மணி அளவில் மணமகள் சைந்தவியின் கழுத்தில், பிரகாஷ்குமார் தாலி கட்டினார். அப்போது அனைவரும் மலர்தூவி மணமக்களை மனதார வாழ்த்தினர். இதையடுத்து திரையுலகின் முன்னணி ஜாம்பவான்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பின்னர் நேற்று மாலை அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.