ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"அங்காடித் தெரு, கற்றது தமிழ் என, கனமான கதைகளை கொண்ட படங்களில்நடித்து, முத்திரை பதித்த அஞ்சலி, இடையில், கிளாமருக்கு முக்கியத்துவம் தரும், சில படங்களிலும் நடித்தார். ஆனால், அஞ்சலி கவர்ச்சியாக நடித்த படங்கள், எடுபடவில்லை. இதனால், மீண்டும், குடும்ப பாங்கான கேரக்டர்களை தேடிச் செல்கிறார். அவர் கூறுகையில், "கவர்ச்சி பொம்மையாக, யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், நல்ல கதையம்சம் உடைய படங்கள், ஒரு சில நடிகைகளுக்கு தான், கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. நான்கு பாடல்கள், இரண்டு காட்சிகளில் வந்து, தலைகாட்டுகிற நடிகை என, பெயர் எடுக்க விரும்பவில்லை. அஞ்சலி என்றால், நல்ல படங்களில் நடிக்கும் நடிகை என, ரசிகர்கள் கொண்டாட வேண்டும். எனக்கு, அதுபோதும் என, ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.