'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் நடித்த பூர்ணாவை கோலிவுட்டில் சின்ன அசின் என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவருக்கு முனியாண்டிக்கு பிறகு எந்த படமும் வெளியாகாத நிலையில் தற்போது வித்தகன், துரோகி, கந்தகோட்டை, அர்ஜூனன் காதலி என பிஸியாக இருக்கிறார். ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி என்று கேட்டால், எனக்கு தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்க வாயப்பு கிடைத்தது. ஒரே நேரத்தில் எல்லா படங்களையும் ஒப்புக் கொண்டால் சரிவராது என்பதால் வாய்ப்புகளை குறைத்துக் கொண்டேன் என்கிறார் விவரமாக. இவர் தற்போது நடித்து வரும் படங்களில் துரோகி படம் ரொம்பவே வித்தியாசமானது. படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என எல்லோருமே பெண்கள். இதுபற்றி பூர்ணா கூறுகையில், பொதுவாக படப்பிடிப்பில் ஆண்களுடைய குரல்தான் ஓங்கி ஒலிக்கும். ஆனால், இந்தப் படத்தை பொருத்தவரைக்கும் பெண்களின் குரல்தான் எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட்கும். இந்தப் படத்தை மணிரத்னத்தின் உதவியாளரான சுதா மேடம் இயக்க, இந்திரா மேடம் தயாரிக்கிறாங்க. படத்தில் விஷ்ணு, ஸ்ரீகாந்த் என இரண்டு கதாநாயகர்கள். நான் விஷ்ணுவிற்கு தங்கையாகவும், ஸ்ரீகாந்திற்கு நாயகியாகவும் நடிக்கிறேன். பெண்களோடு சேர்ந்து வேலைப் பார்க்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதாக உணர்ந்தேன். படப்பிடிப்பிற்கு போய்விட்டால் எல்லாரிடமும் எளிதாக பழகலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம். ஆனால் மற்ற படப்பிடிப்புகளில் அப்படி செய்ய முடியாது, அவ்வளவுதான், என்றார்.