இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆடுகளத்துக்குப்பிறகு தனுஷ் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால்தான் ஒரு சேஞ்சுக்காக அவர் பாலிவுட்டுக்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரோ, தமிழில் மார்க்கெட் இல்லாமல் இந்திக்கு செல்லவில்லை. நான் நடித்த ஆடுகளம் படத்துக்கு நேஷனல் விருது கிடைத்ததால், அது இந்தியா முழுக்கப் பேசப்பட்ட படமானது. அப்போது பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராயும் அந்த படத்தை பார்த்திருக்கிறார். அதில் எனது நடிப்பு அவருக்கு பிடித்திருக்கிறது.
அதையடுத்துதான் எனக்காக ஒரு கதையை தயார் செய்தவர், சிலரை பிடித்து என்னை தொடர்பு கொண்டார். அப்போதுதான் நானும் அவரும் முதன்முறையாக சந்தித்துக்கொண்டோம். அவரது கதையும், அதை அவர் சொன்ன விதமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதோடு, எனக்கான கதையாகவும் தெரிந்தது. அதனால்தான் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
மற்றபடி தமிழ் படங்கள் ஓடாததால் செல்லவில்லை என்று சொல்லும் தனுஷ், நான் எப்போதுமே தமிழ் நடிகன்தான். படங்கள் ஓடினாலும், ஓடா விட்டாலும் இங்குதான் இருப்பேன். அதேசமயம், ராஞ்சனா மாதிரி நல்ல கதைகள் கிடைக்கும்போது அவ்வப்போது மற்ற மொழிகளிலும் நடிப்பேன் என்கிறார் தனுஷ்.