ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது தற்போது பேஷனாகி வருகிறது. அந்த வகையில், 20 வருடங்களுக்கு முன்பு தான் இயக்கி தயாரித்து நடித்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது மீண்டும் இயக்கி நடித்து வருகிறார் அர்ஜூன். முந்தைய படத்தில் இடம்பெற்ற சில கலைஞர்களையும் இந்த பாகத்தில் பயன்படுத்தி வருகிறார் அவர். அதேபோல் சிங்கம் படத்தை இயக்கிய ஹரியும், இப்போது இயக்கியுள்ள அதன் இரண்டாம் பாகத்தில் அதே சூர்யா, அனுஷ்கா, போன்றவர்களை நடிக்க வைத்து மேலும் சிலரை இணைத்திருக்கிறார். படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
ஆனால், இந்த இரண்டு பேரிடமும், இரண்டாம் பாகம் என்கிறீர்களே, அப்படியென்றால் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தானே கதை இருக்கும் என்று கேட்டால், தலைப்புதான் பழையது. ஆனால், இந்த பாகத்தின் கதை முற்றிலும் மாறுபட்டது. பழைய கதைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்கிறார்கள்.
இதில் கமல் மட்டும் விதிவிலக்காக இருக்கிறார். தான் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கி வருபவர், முந்தைய கதையின் தொடர்ச்சிதான் இந்த படம் என்கிறார். அதோடு, சில டெக்னீசியன்களை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, மற்றபடி முந்தைய கதாபாத்திரங்களில் நடித்த அதே நடிகர்-நடிகையர் அப்படியே தொடருகிறார்கள் என்கிறார்.