டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஜீத்தின் 53வது படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன், ஒரு வருடமாக அதற்கான தலைப்பை யோசிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். இதனால் அஜீத்தின் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கே சென்று கொண்டிருக்கிறார்கள். அட, ஒரு படத்துக்கு பெயர் வைக்கிறதுல அவ்ளோ பிரச்சினையா? எங்ககிட்ட கதைய சொன்னா நாங்களே பொருத்தமான தலைப்ப வச்சிட்டுப்போறோம் என்கிற அளவுக்கு வார்த்தைகளை கொட்டத் தொடங்கி விட்டார்கள். இருப்பினும் வழிக்கு வருவதாக இல்லை விஷ்ணுவர்தன். யோசிக்கிறார் யோசிக்கிறார் யோசித்துக்கொண்டேயிருக்கிறார்.
இந்த நிலையில், அஜீத்தின் 54வது படத்தை இயக்கும் சிறுத்தைப்பட இயக்குனர் சிவா, அப்படத்தின் தலைப்பு சுராங்கனி என்று முதலில் வைத்திருந்தவர் இப்போது விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர் வைத்து விட்டாராம். இப்படத்தில் அஜீத் மற்றும் அவரது தம்பியாக விதார்த் உள்பட சில நடிர்களும் நடிக்கிறார்கள். படத்தில் அஜீத்தின் கேரக்டரின் பெயர் விநாயகம் என்பதால், விநாயகம் பிரதர்ஸ் என்ற பெயரை அவர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
என்றாலும், இந்த தகவலை அஜீத் ரசிகர்கள் நம்பத்தயாராக இல்லை. இப்படித்தான், முதலில் 53வது படத்துக்கு வலை என்று நினைத்தோம். பொய்யாகி விட்டது. சம்பந்தப்பட்டவர்களாக ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடாதபட்சத்தில் எதையும் நாங்க நம்பத்தயாராக இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.