மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கடந்த 8-ந்தேதி சென்னையில் தனது பிறந்த நாள் உதவியாக மாற்றுத்திறனாளிகள் உள்பட 3900 பேருக்கு இலவச உதவிகள் வழங்க திட்டமிட்டிருந்தார் விஜய். அதற்காக ஒரு கோடி ரூபாய் செலவிட முடிவெடுத்திருந்தார். அதனால் விழாவுக்கான ஏற்பாடுகள் ஜெயின் கல்லூரி வளாகத்திற்குள் பிரமாண்டமாக நடந்தன. ஆனால் திடீரென்று அந்த விழாவை ரத்து செய்து விட்டதாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்கள் சொல்லபடவில்லை. இதனால் அரசியல் தலையீடு காரணமாகத்தான் அந்த விழா ரத்து செய்யப்படடதாக யூகங்கள் வெளிவந்தன. அதனால் இன்னும் அமைதியாக இருந்தால் சரிப்பட்டு வராது என்று இப்போது விஜய்யே வாய் திறந்துள்ளார்.
அதாவது, அந்த விழா ரத்து செய்யப்பட்டதற்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விழா நடத்த இருந்த கல்லூரியில்தான் திடீரென்று தடை போட்டுவிட்டனர். காரணம், எனது நலத்திட்ட விழாவை யாரோ, அரசியல் கட்சி விழா போன்று நடத்தப்போவதாக அவர்களுக்கு தப்பான தகவல் கொடுத்திருக்கின்றனர். அதை அவர்களும் நம்பி விட்டனர். அதனால்தான் விழா நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக, 3900 ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உதவிகள் போகவில்லை. அது ஒன்றுதான் எனக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் விஜய்.